வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிய பின்னணி இதுதானா.? வைரலாகும் புதிய தகவல்..!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருபவர் பாலா – அவரது படைப்புகள் அனைத்தும் ஒரு வித்தியாசமான கோணத்தில் இருக்கும். நடிகர்களின் முழு நடிப்பு திறனிலும் வெளி கொண்டு வருவதில் பாலாவிற்கு முக்கிய பங்கு உண்டு.

இப்படி இருக்கும் இயக்குனர் பாலாவிற்கு பெரும்பாலான நடிகர்களுக்கும் ஒத்து போவது இல்லை. நான் கடவுள் படம் பாலாவின் இயக்கத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் அந்த படத்தில் இருந்து அஜித் விலகவே அந்த படத்தில் ஆர்யாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனிடையே, பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில்  சூர்யா நடித்த   பெரும்பாலான காட்சிகள் முடிக்கப்பட்டு இருந்தது . படப்பிடிப்பின் பாதியிலேயே சூரிய பாலா இருவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் கசிந்தன.

பாலாவின் இயக்கத்தில் சூர்யா – நந்தா – பிதாமகன் இறந்து படைகள் நடித்தது வெற்றியும் கண்டார் – இந்த நிலையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனாலும் இரண்டு தரப்பிலும் எதுவும் இல்லை என அறிக்கை விட்டு இருந்தன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னாடி பாலா தரப்பிலிருந்து வெளியான அறிக்கை பலரையும் அதிர்ச்சியாக்கியது.

அதில், வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசிஇ ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம்’ என்று கூறப்பட்டிருந்தது.

சூர்யா விலக்கியதற்கு பல காரணங்கள் இணையதத்தில் வைரலாகின. அந்த வகையில் தற்போது, சூர்யா விலகியதற்கு ஒரு புதிய காரணம் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது, பாலா படத்தின் கதையை முழுமையாக முடிக்காமல் இருப்பதாலும், மேலும், சூர்யாவை ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரசொல்லிவிட்டு இயக்குனர் பாலா ஒரு காட்சி கூட எடுக்கவில்லையாம்.

இதனால் ஒரு நாள் முழுவதும் வீணாக்கிவிட்டதால் மிகவும் கோபமடைந்த சூர்யா படத்தில் இருந்து விலகியதற்கான காரணமாம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *