படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறிய வாரிசு பட நடிகர் !! கோபத்தில் கதாநாயகன்
படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறிய வாரிசு பட நடிகர் !! கோபத்தில் கதாநாயகன்
ராகவா லாரன்ஸ் இப்பொது ருத்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து நடிக்கும் முக்கிய நடிகர் ஒருவர் படப்பிடிப்பு தலத்தில் இருந்து பாதியிலேயே சொல்லி கொள்ளாமல் சென்றது சினிமா வட்டாரத்தில் வைரலான செய்தியாக பரவி வருகிறது.

சமீபத்தில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் வாரிசு, வாரிசு படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்தது சரத் குமார். 90 இல் கதாநாயகனாக கலக்கி கொண்டிருந்த சரத் குமார் இப்பொது வில்லனாகவும் கலக்கி வருகிறார்.

சரத் குமார் இப்பொது ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரவு 11 மணிக்குமேல் படப்பிடிப்பு இருந்தால் நடிக்க மட்டன் என்று சரத்குமார் சொல்லியிருந்த நிலையில். படத்தின் சூழ்நிலை கருதி ஒரு காட்சி 11 மணிக்கு மேல் வைக்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த நடிகர் சரத் குமார் பாதியில் கிளம்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை அறிந்த ராகவா லாரன்ஸ் கோபத்தில் கிளம்பியதாக சொல்ல படுகிறது. இந்த செய்தியை மூத்த சினிமா பத்திரிகையாளர் ஒருவர் ஒரு செய்தியில் கூறியுள்ளார்
